கொல்கத்தா மேற்கு வங்க மாநிலம் கொல் கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை விவகா ரத்தை மூடி மறைக்க திரிணாமுல் காங்கி ரஸ் - பாஜக வன்முறை நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.
மருத்துவ மாணவி பாலியல் வன் கொலையை கண்டித்தும், நீதி வழங்க கோரியும் மேற்கு வங்க மாநிலம் முழுவ தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழி யர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தினர், மாதர் அமைப்பினர், பொதுமக்கள் என அனை த்து தரப்பினரும் அமைதியான முறை யில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையை மூடி மறைக் கும் வகையிலும், இடதுசாரிகளின் போ ராட்டத்தை சீர்குலைக்கவும் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக மறைமுகமாக கூட்டுச் சேர்ந்து கட்டவிழ்த்துவிட்டு வரு கின்றனர். செவ்வாயன்று மருத்துவ மாணவி கொலை மூலம் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் பாஜக மறை முகமாக “சாத்ர சமாஜ்” என்ற பெயரில் மாணவர் பேரணியை ஏற்பாடு செய்து இருந்தது. ஹவுரா பாலம் அருகே பேர ணியில் வந்தவர்களுக்கும், கொல்கத்தா காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறி, புதனன்று 12 மணிநேர முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்தது.
பொதுமக்கள் விரட்டியடிப்பு ; ஹெல்மெட்டுடன் பேருந்தை ஒட்டிய ஓட்டுநர்கள்
பாஜகவின் இந்த முழுஅடைப்பு போராட்டத்தை மேற்கு வங்க மக்கள் கண்டுகொள்ளவில்லை. கடைகள், வாகனங்கள் வழக்கம் போல இயங்கின. இதனால் பாஜக குண்டர்கள் கடையை அடைக்கக் கோரியும், பொதுமக்களை வீட்டிற்குச் செல்லுமாறு விரட்டியடித்தும், அரசுப் பேருந்துகளை தடுத்து நிறுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். சில இடங்க ளில் பாஜக குண்டர்கள் அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி வன் முறையில் ஈடுபட்டனர். இதனால் அரசு பேருந்து ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
மோதல்
நாடியாவில் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. நாடியா நகர வீதியில் கடையை அடைக்கச் சொல்லி பாஜக குண்டர்களும், கடையை திறக்கக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் குண்டர் களும் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோத லில் பலர் காயமடைந்ததாக தகவல் வெளி யகியுள்ளது.
ஆர்ஜிகே மருத்துவ மாணவி பாலி யல் வன்கொலை விவகாரத்தை மூடி மறைக்க திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக மறைமகமாக கூட்டு வைத்து முழு அடைப்பு மூலம் வன்முறை நாடகத்தை அரங்கேற்றி வருகிறது என்பது தெளி வாகியுள்ளது.